இஸ்ரேலுக்கு ஆட்களை அனுப்பும், முஸ்லிம் எம்.பி. க்கள்
(அன்ஸிர்)
இஸ்ரேலுக்கு அவசரமாக 10 ஆயிரம் இலங்கைத் தொழிலாளர்கள், தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு அமைச்ரவையும், சிறப்பு அனுமதியை வழங்கியிருந்து.
இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்விகளும் எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அமைச்சர் மனுச நாணயக்காரவிடம், தமது ஆதரவாளர்கள் சிலரையும் இஸ்ரேலுக்கு அனுப்ப உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை 25 ஆம் திகதியும் கூட, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் வைத்து, தமது சிபார்சில் யாரை இஸ்ரேலுக்கு அனுப்ப வேண்டுமென்ற பெயர் பட்டியலை அமைச்சர் மனுசவிடம் ஒப்படைந்துள்ளனர்.
குறித்த தகவல் மிகவும் நம்பகரமான, ஆதாரபூர்வமான பாராளுமன்ற வட்டாரங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்தது.
Post a Comment