Header Ads



இத்தாலியில் ரயில் மோதி, இலங்கையர் மரணம்


இத்தாலியின் voghera ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் சரக்கு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.


வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நிரோஷன் பெர்னாண்டோ புகையிரத நடைமேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த புகையிரதத்தின் வேகத்தினால் ஏற்பட்ட காற்றினால் தள்ளுப்பட்டதாக இத்தாலியில் வசிக்கும் எமில் ரொஹான் தொலைபேசி மூலம் லங்காதீபவிற்கு தெரிவித்தார்.


விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

No comments

Powered by Blogger.