Header Ads



கிணற்றில் விழுந்த கோழியால் குழப்பம்


கிணறு ஒன்றுக்குள் கோழியொன்று  விழுந்ததால் கோபமடைந்து போத்தலை உடைத்து பக்கத்துவீட்டு நபரின் மீது தாக்குதல் நடத்திய 29 வயதான நபரொருவர்  வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்வத்தகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.   


 மேலும்,  சந்தேகநபரின் குடும்பமும் காயமடைந்தவரின் குடும்பமும் ஒரே கிணற்றை பயன்படுத்துவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் கோழி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.  கிணற்றுக்குள் விழுந்த கோழியை அகற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.