Header Ads



"ஹமாஸ் தலைமைக்கு, நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்"


காசாவில் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு ரஷ்ய பெண்களை விடுவித்ததற்காக ஹமாஸுக்கு ரஷ்யா நன்றி தெரிவித்துள்ளது.


"எங்கள் தொடர்ச்சியான முறையீடுகளுக்கு சாதகமான பதிலை வழங்கியதற்காக ஹமாஸ் இயக்கத்தின் தலைமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று மாஸ்கோவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


காசா பகுதியில் எஞ்சியுள்ள ரஷ்யர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.


பல மேற்கத்திய நாடுகளைப் போலன்றி, ரஷ்யா ஹமாஸை ஒரு "பயங்கரவாத" அமைப்பாக அங்கீகரிக்கவில்லை. ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறார். மாஸ்கோ இரு நாடுகளுடனும் உறவுகளைப் பேணி வருகிறது

No comments

Powered by Blogger.