Header Ads



இத்தாலியில் தியாகம் செய்யப்பட்ட, இலங்கையரின் உடல் உறுப்புக்கள்


இத்தாலியின் சிசிலியா தீவில் உள்ள கத்தானியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவு அடைந்த இலங்கையர் ஒருவரால் பலர் வாழ வைக்கப்பட்டுள்ளனர்.


அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் அவரது இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.


ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய இளைஞனின் உடல் உறுப்புகளே இவ்வாறு தானமாக மீட்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.