மஹிந்தவின் குடியுரிமையை இல்லாதொழிக்க, சஜித் சேகரிக்கும் கையொப்பங்கள் - நாமல் கடும் விமர்சனம்
மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பல சந்தர்ப்பங்களில் அழிக்க புலி ஆதரவாளர்கள் உட்பட பல்வேறு குழுக்கள் முயற்சித்ததாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ வின் குடியுரிமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்ப சேகரிப்பு பிரசாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலிப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வை இராணுவ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள், சிவில் உரிமைகளை இல்லாதொழிக்க முயன்றனர் என்றார்.
அரகலயவின் போது மஹிந்த ராஜபக்ஷவை கொல்ல முயற்சித்தார்கள், தற்போது வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை வங்குரோத்து செய்ததாக கூறி குடியுரிமையை இல்லாதொழிக்க முயல்வதாகவும், இவை வெறும் பிரபலம் அடைவதற்காக எதிர்க்கட்சிகளின் நாடகங்கள் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தக் கழுதை மாபெரிய கள்ளன், துபாய் உற்பட பலநாடுகளில் இந்த நாட்டு மக்களின் சொத்துக்களைச் சூறையாடி கொள்ளையடித்து துபாயில் உல்லாசப்பிரயாண ஹோட்டல்கள் பல பொழுதுபோக்கு நிலையங்கள் அமைத்து மாதாமாதம் கோடான கோடி பணத்தைச் சட்டவிரோதமாக சேர்ப்பவன். இவனுக்கு விரோதமாக சட்டநடவடிக்ைக எடுத்து இவனுடைய குடியுரிமையை இல்லாமல் செய்து நிரந்தரமாக சிறையில் அடைக்க இந்த நாட்டு பொதுமக்கள் மிகத் தீவிரமாக இயங்கவேண்டும்.
ReplyDelete