Header Ads



"பற்றி எரியும் பலஸ்தீனம்" - காத்தான்குடியில் பலஸ்தீன எழுச்சி இலக்கிய நிகழ்வுகள் (படங்கள்)


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


பலஸ்தீன் மண்ணில் சியோனிஸ்டுகள் நடாத்திவரும் படு பாதக அட்டூழியங்களைக் கண்டு குமுறி எழும் கவிஞர்களின் "பற்றி எரியும் பலஸ்தீனம்" எனும் தலைப்பிலான பலஸ்தீன எழுச்சி இலக்கிய நிகழ்வுகள் இன்று காத்தான்குடி முஸ்லிம் கலாச்சார திணைக்கள கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.


காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்ற பலஸ்தீன எழுச்சி இலக்கிய நிகழ்வுகளில் கலாயோகி எச்.எம்.இக்பால்கான் பலஸ்தீன எழுச்சிக் கவியரங்கிற்கு தலைமை வகித்தார்.


கவிஞர்களான கலைமதி றபாய்தீன்,எம்.எம்.ஷாஹிர் ஹூசைன்,முகைதீன் சாலி, இக்பால் பலாஹி,நூன் அப்துல் ரஹீம்,ஏரூர் ரமீஸ்,ஏ.எல்.சப்ரி, உஸனார் ஜாபீர் ஆகியோர் உணர்வுக் கவிதை பாடினர்.


பலஸ்தீனமும் போராட்டமும் என்ற தலைப்பில் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேள முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஆதம்லெப்பை பலாஹி சிறப்புரையாற்றினார்.















No comments

Powered by Blogger.