உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 55 மாதங்கள் - நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்
- Ismathul Rahuman -
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 55 மாதங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய சந்திதியில் (பால்திசந்தி) நேற்று 21 ம் திகதி அமைதி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நீர்கொழும்பு பிரஜைகள் முன்னணி ஏற்பாடு செய்த இவ் ஆர்ப்பாட்த்தில் உயிர்த்த ஞாயிறு குற்றம் இழைத்தவர்களை பாதுகாப்பதை உடன் நினைத்து, நீதிக்காக போராடுவோம், உண்மை நீதி நிலைநாட்டப்படும்வரை நாம் விழிப்புடன், ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு கொலையாளிகளை பாதுகாக்கிறார், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் புலனாய்வு பிரிவிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்து போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.
Post a Comment