Header Ads



அமெரிக்காவில் 3 பலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு


பலஸ்தீனத்தில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்றுள்ள  3 மாணவர்கள் மீது துப்பர்க்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


அவர்கள் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஹிஷாம் அவர்தானி, ஹவர்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் கின்னன் அப்தெல் ஹமீத் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் படிக்கும் தஹ்சீன் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அவர்தானிக்கு முதுகில் சுடப்பட்டதாகவும், அகமது மார்பில் மற்றும் அப்தெல் ஹமீதுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


குடும்ப உறுப்பினர்கள் இதை ஒரு வெறுப்புக் குற்றம் என்று அழைக்கிறார்கள், ஆனால் துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கத்தை பொலிசார் இன்னும் மதிப்பிடவில்லை.

No comments

Powered by Blogger.