நேபாளத்தில் நிலநடுக்கம் - டெல்லி வரை அதிர்வு
நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை மிகக் கடுமையான அளவுக்கு உணரப்பட்டது.
வீடுகள், கட்டடங்களில் உள்ள பொருள் அனைத்தும் அதிர்ந்தன. பெரும்பாலானவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய வெட்ட வெளிக்கு வந்தனர்.
பிற்பகல் 2.51 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 6.2 அளவில் நேபாளத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீதிக்கு வந்து கூடியதை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.
Post a Comment