Header Ads



கொழும்பில் ஏற்பாடாகியிருந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தடை போட்ட நீதிமன்றம்


கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.10.2023) ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சில தரப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம், செரமிக் சந்தி, சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பாலதக்ச மாவத்தைக்குள்ளும் ஆர்ப்பாட்டகார்கள் செல்வதை தடுக்கும் விதமாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.


இதற்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தென்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.