Header Ads



இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவர்கள் வெட்கப்பட வேண்டும், பள்ளிவாசலுக்கு வந்து பாதிரியார் கூறிய விடயங்கள் (இலங்கையில் நெகிழ்ச்சி)


 ஜும்மாவில் கிறிஸ்தவ பாதிரியார் கூறுவதென்ன? 

நான் வழமையாக ஜும்மாவிற்கு செல்லும் Kandy Grand Mosque (லைன்பள்ளி) யில் முஸ்லிம்களுக்கு நன்றி கூறுவதற்காக இரணடு பாதிரியார்கள் வந்திருந்தனர்


ஒருவர் ஷெல்டன் பாதிரியார், மாற்றவர் மைக்கல் பாதிரியார்


இவர்கள் எதற்காக முஸ்லிம்களுக்கு நன்றி கூறனும், ஜும்மாவின் பின் பாலஸ்தின சுஹதாக்களுக்கு ஜனசா தொழுகையும் உறுக்கமான துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.


அதன் பின் செல்டன் பாதிரியார் பேசினார், 


பலஸ்தீனில் முஸ்லீம்கள் தங்கள் உயிரை கொடுத்து போராடுகிறார்கள்,  அந்த பலஸ்தீனத்தில் அதிகளவு கிறிஸ்தவார்களும் இருக்கிறார்கள், அங்கே தேவாலயாங்கன் குண்டு போட்டு அழிக்கிறார்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் இஸ்ரேளுக்கு ஆதரவா இருக்கிறார்கள் இது வெட்கப்பட வேண்டிய விஷயம்,


எங்கள் கிறிஸ்தவர்களுக்குகாகவும் சேர்த்து போராடும் முஸ்லிம்களுக்கு தாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதே அவரின் பேச்சின் சுருக்கம்


இந்த செல்டன் பாதிரியார் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் போது இது முஸ்லிம்களின் செயலல்ல என்று அடித்து கூறி முஸ்லிம்களுக்கு ஆதரவா இருந்தவர் கண்டியில் அசம்பாவித்தங்கள் ஏற்படாமல், பார்த்துக்கொண்டவர்.


Fazeel Mohamed 

No comments

Powered by Blogger.