Header Ads



மாலத்தீவு ஜனாதிபதி தேர்தலில் முகமது முய்சு வெற்றி - இந்தியா வெளியேற, சீனா உட்புகுமா..?


மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றுள்ளார். பதவி விலகும் அதிபர் இப்ராகிம் முகமது சோலி தோல்வியை ஏற்றுக்கொண்டார்.


முகமது முய்சு நவம்பர் 17ஆம் தேதி அதிபராக பதவியேற்கிறார். அதுவரை இப்ராகிம் சோலி தற்காலிக அதிபராக இருப்பார்.


முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர் என்று கருதப்படுகிறார். அதேசமயம் இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகள் வலுப்பெற்றன.


செயல் உத்தி காரணங்களுக்காக சீனாவும் இந்தியாவும் மாலத்தீவில் தேர்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்று நம்பப்படுகிறது.


முகமது முய்சுவுக்கு 54 சதவிகித வாக்குகள் கிடைத்தன. தலைநகர் மாலேயின் மேயரான முகமது முய்சு தனது தேர்தல் பிரச்சாரத்தில் 'இந்தியா அவுட்' அதாவது இந்தியாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் முழக்கத்தை முன்வைத்திருந்தார்.


பதவி விலகும் அதிபர் முகமது சோலி, இந்தியாவுடனான வலுவான உறவை ஆதரிப்பவராகக் கருதப்படுகிறார்.


61 வயதான இப்ராஹிம் 2018 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறார். மாலத்தீவு ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய இப்ராஹிம் சோலி தனது பதவிக்காலத்தில் 'இந்தியா முதலில்' அதாவது இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அமல்படுத்தினார்.


மாலத்தீவுக்கு ஏற்கனவே இந்தியாவுடன் கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன.


மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் செல்வாக்கின் கீழ் உள்ளது. மாலத்தீவில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பராமரித்து வருவதாக நம்பப்படுகிறது.


முகமது முய்சு யார்?

1978 இல் பிறந்த முகமது முய்சு, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து சிவில் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 2012 இல் அரசியலுக்கு வந்த அவர் அமைச்சரானார்.

யாமீன் ஆட்சிக்கு வந்த போதும் முய்சு தனது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருந்தார். மாலேயை சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும் 200 மில்லியன் டாலர் செலவிலான பாலம் உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார். விமான நிலையம் மற்றொரு தீவில் அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், அவர் மாலே மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் பிபிஎம் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

1 comment:

  1. இந்தியா ஆசியாவின் அசிங்கம். ஒரு கேடுகெட்ட பிச்சைகார நாடு

    ReplyDelete

Powered by Blogger.