Header Ads



குப்பைக்கு தீ வைத்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - தவிக்கும் பிள்ளைகள்


வீட்டில் குப்பை கொளுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.


யாழ்., சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


 கடந்த 7ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்த குப்பையை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது.


காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்குத் தீ மூட்டியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.


அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ள நிலையில் கடைசிப் பிள்ளைக்கு 2 வயது எனவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.