Header Ads



காத்தான்குடி முஸ்லிம்கள் இஸ்ரேலின், போர்க் குற்றங்களை கண்டித்து போராட்டம்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


பலஸ்தீன் காசா பிரதேசத்தில் இஸ்ரேஸ் நடாத்திவரும் பாரிய தாக்குதல்களைக் கண்டித்து இன்று புனித ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்;ம் இடம் பெற்றது.


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இவ்ஆர்பாட்டத்திலும் எதிர்ப்பு பேரணியிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் பங்கு  கொண்டனர்.


சகல ஜூம்ஆ பள்ளிவாயல்களிலுமிருந்து ஆரம்பமான கண்டன பேரணிகள் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தை அடைந்து அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


ஆர்ப்பாட்ட இடத்தில் பெருமளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.