Header Ads



இங்கே நாம் பேசி அங்கே நேரடியாக எதுவும் ஆகப்போவதில்லை - இஸ்ரேல், பலஸ்தீன் யுத்தம் குறித்து மனோ


- மனோ கணேசன் Mp -


மதக்கண்ணாடிகளை கழற்றி வைத்து_விட்டு, உண்மைகளை தேடுவோம். அவ்வளவுதான்..!


இந்த முறை சண்டை, ஹமாசின் திடீர் தாக்குதலினால் ஆரம்பமானது என்பது உண்மை. அதனால் இஸ்ரேலில் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளன என்பதும் உண்மை. 


இதுபற்றி நான் பேச ஆரம்பித்த உடனேயே, நான் என்ன கூற வருகிறேன் என்பதை தேடி அறியாமலேயே சிலர் இங்கே என்னிடம் கோபித்து கொண்டார்கள்.  


இதுபற்றி எல்லாம் கணக்கில் எடுக்காமல் நான் கடந்து போகிறேன். 


யுத்தம் என்பது வேறு. அது பல பத்தாண்டுகளாக இஸ்ரேல், பலஸ்தீன தரப்புகளுக்கு மத்தியில் நிகழ்கிறது.


அதன் அடிப்படை, பாலஸ்தீனத்தை குறிவைத்திருக்கும் ஆக்கிரமிப்பு அநீதி.  


BBC, CNN ஆகியவற்றை விட, அல்-ஜெஸிரா, ஒப்பீட்டளவில் உண்மைகளை அதிகம் கூறுகிறது.


AlJazeera வில் இஸ்ரேலிய சேதங்களையும் காட்டுகிறார்கள். இஸ்ரேலிய வாதங்களையும் காட்டுகிறார்கள். 


ஆனால், அதிகம் பலஸ்தீன சேதங்கள்தான். காரணம் எளிமையானது. சேதம், பரிதாபம், பலஸ்தீன தரப்பில்தான் அதிகம். 


இங்கே நாம் பேசி. அதனால் அங்கே நேரடியாக எதுவும் ஆகப்போவதில்லை. 


ஆனால் உண்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும். எப்போதும், இன, மத கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு உண்மையை  தேடுவோம்.


மதக்கண்ணாடிகளுடன் இங்கே வராதீங்கப்பா! 


No comments

Powered by Blogger.