Header Ads



எரிபொருள் விலையை அதிகரித்த சினோபெக்


எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.


சினோபெக் நிறுவனம் இன்று (01.10.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 348 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 417 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.