Header Ads



விக்கிரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம்


நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கும் இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்களாவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை அவர் வடக்கு, கிழக்கு சென்று ஒன்றையும், தெற்கில் இன்னொன்றையும், வெளிநாடு சென்று மற்றொன்றையும் மாறி மாறி சொல்லித் திரியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பகிரங்கமாக ஒரு சவாலை விடுகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் அதாவது முடிந்தால் தேசிய ரீதியில் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.