Header Ads



40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ், 18 பேர் காயம்


பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று -20-  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.


இதன்போது பேருந்து சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


மேலும் விபத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.