Header Ads



வாழ்த்துச் செய்தி


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனீஸ் ரவூப் அவருடைய மகள் தமீனா செரிப்டீன் இருவரும் நோர்வேயில் இடம் பெற்ற தேர்தலில்  வெற்றியினை பெற்றுக் கொண்டுள்ளனர். 


அனீஸ் ரவூப் உண்மையிலேயே சமூக செயற்பாட்டாளர் பல்வேறுபட்ட விடயங்களில் இலங்கை நாட்டு முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் குறிப்பாக வடமாகாண முஸ்லிம்கள் சம்பந்தமாகவும் வடமாகாண முஸ்லிம்களுடைய வெளியேற்றம் மற்றும் மீள்குடியேற்ற விடயத்திலே ஜெனீவா மகாநாட்டில் அவருடைய ஆழமான கருத்துக்கள் முன் வைத்திருக்கின்றார்.


அது மாத்திரமின்றி தனிப்பட்ட ரீதியிலும் மனிதர்களுடைய தேவைகளை உணர்ந்து அவர்களுக்கான வேலை திட்டத்தை செய்யக்கூடிய ஒரு இரக்க மனம் கொண்ட ஒரு மனிதர்  இவரும் மகளும் நோர்வே தேர்தலில்  வெற்றி பெற்று இருக்கின்றார்கள்.


இவர்களின் வெற்றி  இலங்கை நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பெருமை பெற்று தரக்கூடியதாக இருந்து கொண்டிருக்கின்றது.


அதிலும் குறிப்பாக இவர்கள் இருவரும் யாழ் மண்ணுக்கு மிகவும் பெருமை தேடி தந்துள்ளனர்  இவர்கள் உடைய சேவை மென்மேலும் தொடர வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம் 


A.M. அப்துல் மலிக்  மௌலவி

தலைவர் 

யாழ் கிளிநொச்சி சிவில் அமைப்பு



No comments

Powered by Blogger.