Header Ads



பணம் கொடுத்தவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாதவருக்கு ஏற்பட்ட நிலை (உள்ளே படங்கள்)

- Ismathul Rahuman -


        சீதுவ, தண்டுகம் ஓயாவில் இருந்து மீட்கப்பட்ட சடலம் மாரவில எடம்பல ஆரச்சிகே சுசன்த ரன்ஜன் ரணசிங்க எனும்35 வயது நபர் என அடையாளம் காணப்படடுள்ளது.


    சம்பவத்தை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அவரது தாயாரான மாராவில,குடாவெவ, லும்பினி மாவத்தையைச் சேர்ந்த ரனசிங்க ஆரச்சிகே சிறியானி என்பர் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையம் வந்து மரணமானவர் தனது மகன் என அடையாளம் காட்டியுள்ளார்.


  திருமணமாகாத இவர் தாயுடன் வாழ்ந்து வந்ததாகவும் மூன்று சகோதரிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


    மரணமானவர் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி மாரவில, மஹவெவ, கட்டான ஆகிய பிரதேசங்களில் சிலரிடம் பணம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


  பணம் கொடுத்தவர்கள் எவரையும் வெளிநாட்டுக்கு அணுப்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால்  பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு  வருவதால் சுசன்த என்பவர் வீட்டிலிருந்து வேறு வேறு இடங்களில் மாறி மாறி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


       கடந்த ஆறு நாட்களுக்கு முன் மரணமானவர் உறவினரான சஜித் என்பவருடன் வீட்டிலிருந்து சென்றதாகவும் அதன் பின் எந்தத் தகவலும் இல்லையான கூறியுள்ளார். இது தொடர்பாக எந்த ஒரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


    18ம் திகதி திங்கட்கிழமை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.






No comments

Powered by Blogger.