Header Ads



மாணவியை காணவில்லை


கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து  நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற, மாணவி ஒருவர் கடந்த மாதம் 5-ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் குறித்த மாணவியை பெற்றோர்  தேடி வருகின்றனர்.


கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து  சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023 (கலை) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த புவனேஸ்வரன் ஆர்த்தி என்ற மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


இவரை பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும், இவரை பற்றிய எந்தவொரு தகவலும்  கிடைக்கவில்லை.


இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை இலங்கையின் எப்பிரதேசத்திலாவது கண்டவர்கள் இருந்தால் 0774941522 அல்லது  0772144553 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு (தந்தை) அறிய தருமாறு   கேட்டுள்ளார் .

No comments

Powered by Blogger.