Header Ads



பள்ளத்தில் சாய்ந்த முச்சக்கர வண்டி


- எஸ்.சதீஸ் -


நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை வி்ட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் 13.09.2023.புதன்கிழமை மதியம் 12.45மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


பொகவந்தலாவ மோரா தோட்டபகுதியில் இருந்து ஹட்டன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் முச்சக்கர வண்டியில் சாரதி மற்றும் அவரது மனைவி ஒன்னரை வயது குழந்தை ஆகியோர் பயணித்ததாகவும் முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தலைப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு மூன்று பேரும் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


விபத்துக்கான காரணம் இதுவரை கண்டரிய படவில்லையென தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிகமாக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

No comments

Powered by Blogger.