Header Ads



புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை


புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்தில் முதலைகள் சஞ்சரித்து வருவதால் அன்கு செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.


அப்பகுதியில் குளிப்பதற்கு வருகை தரும் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு எலுவாங்குளம் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில் குறித்த பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் வேளையில் சுமார் 7 அரை அடி நீளமுடைய முதலையொன்று  அவதானிகப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.