Header Ads



இலங்கையின் மிக ஆபத்தான நபர்



இலங்கை முழுவதும் 39 கொலைகளை அவரது கும்பல் செய்துள்ளதாக கணேமுல்ல சஞ்சீவவின் வாக்குமூலங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.


இவை அனைத்தும் சஞ்சீவவுக்கு தெரிந்தே நடந்தவை என்றும், சில கொலைகள் பழிவாங்கும் செயல் என்றும், சில கொலைகள் ஒப்பந்தங்கள் எனவும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


தற்போது சஞ்சீவ மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


சில காலம் சிறையில் இருந்த கணேமுல்ல சஞ்சீவ 2021ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்து இரகசியமாக வெளிநாடு சென்றதாகவும், வெளிநாடு சென்று 2 வருடங்களில் 17 கொலைகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


மனிதக் கொலைகள் மட்டுமின்றி பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த பாதாள உலக தலைவரின் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கனேமுல்ல சஞ்சீவ போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.