Header Ads



கெப் வாகனத்துடன், ஒன்றரை கோடி ரூபா பணத்துடன், 5 பேர் கைது


யாழில் கெப் ரக வாகனம் மற்றும் ஒன்றரை கோடி ரூபா பணம் என்பவற்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


உரும்பிராய் பகுதியில் கடந்த 29, 30ஆம் திகதிகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.


கெப் வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி பொருத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.


இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேகநபர்களை கைதாகியுள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார்சைக்கிள் மற்றும் 15 மில்லியன் (1.5 கோடி) ரூபா பணம் என்பன மீட்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.