Header Ads



சனல் 4 வீடியோ - நீதியரசர் இமாம் தலைமையில் மூவரடங்கிய குழு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 வௌிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் S.I. இமாம் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி A.C.M. ஜயலத் வீரக்கொடி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ A.J. சோசா ஆகியோரும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்  

1 comment:

  1. இது போன்ற விசாரணைக்குழுக்களை நியமித்து பொதுமக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது. இதயம் இல்லாத பொதுமக்களின் ஆதரவற்ற கூட்டம் இனியும் தொடர்ந்து பொதுமக்களை ஏமாற்றும் பணியில் ஈடுபடுவதன் விளைவை இனி வரப்போகும் தேர்தல்களில் மிகத் தௌிவாகக் கண்டு கொள்ள முடியும். பொதுமக்களின் குரல்களைப் புறக்கணிக்கும் இந்த அரசாங்கம் மிக விரைவில் அடையாளம் காணாத வகையில் அழிந்து போவது நிச்சியம்.

    ReplyDelete

Powered by Blogger.