Header Ads



இம்தியாஸ் Mp யின் ’சிந்திப்போம்’


“பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய 'சிந்திப்போம்' பத்திகளின் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்துக்கருகில் உள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.


இலங்கை மிகவும் உன்னத மற்றும் செழுமை மிகு நிலைமையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த எதிர்பார்போடு முற்போக்குப் பார்வை நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் சில காலமாக தேசிய பத்திரிகையொன்றுக்கு எழுதிய பத்திகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது.


முன்னதாக பல்வேறு துறைகளை அடிப்படையாகக் கொண்டு அவர் ஐந்து படைப்புகளை இலக்கியத் துறைக்கு சமர்ப்பித்துள்ளர். 'சிந்திப்போம்' நூலை வெளியீட்டு நிகழ்வன்று 50 சதவீதம் விசேட விலைக்கழிவுடன் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

No comments

Powered by Blogger.