Header Ads



பாகிஸ்தானுடன் மோத இலங்கையை வந்தடைந்த ஆப்கானிஸ்தான்


பாகிஸ்தான் அணிக்கெதிரான 03 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ள  ஆப்கானிஸ்தான் அணி இன்று இலங்கையை வந்தடைந்தது.


மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


தொடரின் முதலிரண்டு போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி கொழும்பு R பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.


ஆப்கானிஸ்தான் அணியை Hashmatullah Shahidi-யும் பாகிஸ்தான் அணியை பாபர் அசாமும் வழிநடத்தவுள்ளனர்.


இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான முன்னோடித் தொடராக,  இந்த தொடர் குறித்த இரு அணிகளுக்கும் அமையவுள்ளது. 


No comments

Powered by Blogger.