Header Ads



தீயில் சிக்கிய இளம் தம்பதியினர் உயிரிழப்பு


கம்பஹாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பரிதாப சம்பவம் கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.


மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும் அந்தப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையிலேயே தீ விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு கடும் தீக்காயங்களுக்கு உள்ளான கணவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.