Header Ads



சடலத்துடன் நடு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள்


வவுனியாவில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ் ஆர்ப்பாட்டம் நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.


இதன்போது அவ் இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.


அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அத்தோடு அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்துள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் சம்பவத்தில் வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'ஐஸ் - கஞ்சா- மாபா- ஹெரோயின், போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்' என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

No comments

Powered by Blogger.