Header Ads



குச்சவெளி விபத்தில் இளைஞர் வபாத்


திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை - தோப்பூரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான்-அன்சார் (சுஜா) (31 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் குறித்து தெரியவருகையில், 


இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் விபத்து தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.