Header Ads



அரசாங்கத்தின் தந்திரோபாயத்திற்கு சச்சிதானந்தன் உதவுகின்றார் - முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான தமிழர்கள் இதனை கருத்திற் கொள்க


குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவசேனையின் மறவன்புல சச்சிதானந்தன் உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார்.


அந்த பதிவில்,


குருந்தூர் மலையில் இடம்பெறுவது தனியான ஒரு சம்பவமில்லை, மாறாக வடக்கு-கிழக்கின் குடிசன பரம்பலை மாற்றுவது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது உட்பட பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு நீண்டகால தந்திரோபாயமே அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகின்றது.


இதற்காக தொல்பொருள் திணைக்களம், இராணுவம் பௌத்த மதகுருமார்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.


இந்து வலதுசாரி அமைப்பான சிவசேனையின் மறவன்புல சச்சிதானந்தன் போன்றவர்கள் அரசாங்கத்தின் இந்த மூலோபாயத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கின்றனர்.


இந்த குழுக்களிற்கு ஆதரவளித்து கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் தமிழர்கள் இதனை கருத்தில்கொள்ள வேண்டும்.


தங்களை இந்த விடயம் பாதிக்காது என கருதும் இந்த விடயம் குறித்து கரிசனையற்றவர்கள் பௌத்த மதகுருமார் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதையும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் கருத்தில்கொள்ள வேண்டும்.


இது நீதித்துறையின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்படாத நீதி அமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


வீரகேசரி

No comments

Powered by Blogger.