Header Ads



பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில், ரணில் கச்சிதமாக ஈடுபடுகிறார்


பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கச்சிதமாக ஈடுபட்டு வருகிறார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் இன்று (02.08.2023)  காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.


எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சஜித் பிரேமதாச எங்கள் கூட்டணிக்கே தலைவரொழிய சஜித் பிரேமதாச எனக்கு தலைவர் அல்ல  என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.