Header Ads



இஸ்மாயில்புரம் - வளத்தாப்பிட்டி வீதியை புனரமைப்பது யார்..?


(அஸ்ஹர் இப்றாஹிம்)


சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கஸ்டப் பிரதேசமான  இஸ்மாயில்பரம் சுனாமி மீள் குடியேற்றத்திட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை மிகவும்  நீண்ட  காலமாக கவனிப்பார் நிலையில் காணப்படுகின்றது. 


கல்முனை    -    அம்பாரை பிரதான வீதியிலிருந்து செல்லும் ஒரு கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு உடைந்தும் சிதைந்தும் போக்குவரத்திற்கு பொருத்தமற்ற நிலையிலும் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. 


இவ்வீதியிலேயே வளத்தாப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயமும் காணப்படுகின்றது. பலதடவை இவ்வீதி அளவீடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை திருத்தம் செய்யப்படாது காணப்படுவதாக பிரதேசவாசிகள் விஷனம் தெரிவிக்கினறனர். 


ஒரு தடவை இவ்வீதியை புனரமைக்க கற்கள் கொட்டப்பட்டு அதை மீண்டும் ஏற்றிக்கொண்டு சென்றதாக பிரதேச பொதுமக்கள் தெரிவித்தனர். 


போக்குவரத்திற்கே பொருத்தமில்லாது காணப்படும் இவ்வீதியை புனரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.