Header Ads



இலங்கையில் சீனாவின் எரிபொருள் விற்பனை ஆரம்பம்


நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த Sinopec நிறுவனம்  தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (30) ஆரம்பித்தது.​


இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது.


சீனாவின் Sinopec நிறுவனம் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி  நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 


இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு உரிமை உண்டு.


CEYPETCO மற்றும் IOC-யின் விலைக்கு அமைய Sinopec எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.