Header Ads



மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம் - சிலர் கைது


இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டி 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


3 பெண்களும் 6 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள்


பலவந்தமாக பிரவேசித்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் குழுவொன்று பலவந்தமாக பிரவேசிக்க முற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்றே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரியவருகிறது. 


அதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. 

No comments

Powered by Blogger.