Header Ads



ரகசிய டீல் - பணக்கார கணவன் அதிர்ச்சி, பிடிபட்ட மனைவி மீது பொலிஸ் நிலையம் புகுந்து தாக்குதல்


யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்.நகரிலுள்ள உள்ள நகைகடை ஒன்றின் உரிமையாளரின் மனைவியே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.


இந்த நிலையில் , கைதான மனைவியை பார்க்க வேண்டும் என பொலிஸ் நிலையம் வந்த கணவன் மனைவி மீது பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடாத்தியுள்ளார்.


இந்நிலையில் அதிச்சியடைந்த பொலிஸார், கணவனின் தாக்குதலில் இருந்து மனைவியை காப்பாற்றியதுடன் , மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் கணவனையும் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட பெண் ,கணவனுக்கு தெரியாமல் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதும் இதனையடுத்து , பெண்ணுக்கு போதைப்பொருளை விநியோகித்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.