Header Ads



உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் - வெண்டைக்காய், கௌபிக்கு முன்னுரிமை வழங்கவும்


எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு விளை நிலங்களிலும் குறுகிய கால உணவுப் பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இடைப்பட்ட பருவத்தில் வெண்டைக்காய் மற்றும் கௌபி சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.


கடுமையான வறட்சி காலநிலை காரணமாக அவர் இந்த பணிப்புரையை விடுத்து உள்ளார்.


நிலவும் வரட்சி நிலை காரணமாக சில பிரதேசங்களில் இடைநிலைப் பருவப் பயிர்ச்செய்கைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற போதிலும், பல பிரதேசங்களில் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.