Header Ads



74 வயது வயோதிப தாயை, வன்புணர்வு செய்த 54 வயது மகன் கைது


ரத்தோட்டையில் வயதான தாயை மகன் வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


இது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மகனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது 54 வயது மகனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ரத்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.


தாயார் பொலிஸில் அளித்துள்ள முறைப்பாட்டில் தனது மகனின் உடல்நிலை தொடர்பில் பரிசோதிக்க ஹோட்டலுக்குச் சென்றதாகவும் அவர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.