Header Ads



67 வயதுடைய நபரை அச்சுறுத்தி 69 இலட்சம் ரூபாவை சுருட்டிய பெண்


திருமண விளம்பரம் மூலம் சந்தித்த 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி மிரட்டி 69 இலட்சம் ரூபாவை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட 57 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 


சந்தேகத்திற்கிடமான பெண்ணின் மார்பகத்தில் உள்ள நரம்பு வெடித்துள்ளதால், அதனை அறுவை சிகிச்சை மூலம் புனரமைக்க முடியும் என்பதற்காக இந்த பணத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் 26 மற்றும் 32 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தப் பெண்ணுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர் கண்டி கண்ணொருவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேகநபர்கள் இருவரும் பேராதனை, எரிகம மற்றும் முருதலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.


நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொழிற்சாலை ஒன்றில் உதவி உத்தியோகத்தராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற 67 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது சகோதரியின் வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


அதன்பின்னரே திருமண விளம்பரமொன்றை அந்நபர் கொடுத்துள்ளார். அதிலிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதன் பின்னரே அப்பெண் 67 வயதான நபரை ஏமாற்றியுள்ளார்.

No comments

Powered by Blogger.