Header Ads



பிறந்து 3 நாட்களேயான குழந்தை மீட்பு


மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிறந்து மூன்று நாட்களேயான அந்த குழந்தை, வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.