Header Ads



இலங்கைக்கு கிடைக்கவுள்ள 333 மில்லியன் டொலர்கள்


சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்த தொகை அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.


சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு, நிதி ஒழுக்கத்தைப் பேணல் மற்றும் வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல் போன்ற முன்மொழிவுளை நடைமுறைப்படுத்துவதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இதற்கு பிரதான காரணமென ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.