Header Ads



எந்த நிபந்­த­னை­களும் இன்றி இலங்­கைக்கு முத­லா­வ­தாக 200 மில்­லியன் டொலர் கடனை வழங்கியது பங்­க­ளாதேஷ்தான்


மாவ­னெல்லை பது­ரியா மத்­திய கல்­லூ­ரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்­கத்­தினால் நடாத்­திய 74 ஆவது ஊடக கருத்­த­ரங்கின் சான்­றிதழ் வழங்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் உரை­யாற்றும் போது, 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இது­வரை 74 கருத்­த­ரங்­கு­களை பாட­சாலை மாண­வர்கள், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக நடத்தி இருக்­கி­றது. இதன் மூலம் மாண­வர்கள் மத்­தி­யிலே நாங்கள் ஊட­கத்தைப் பற்­றிய ஆர்­வத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்றோம். அதில் நாங்கள் வெற்­றியும் கண்­டி­ருக்­கின்றோம்.


இன்று இந்­நி­கழ்­வுக்குப் பிர­தம அதி­தி­யாக பங்­க­ளா­தேஷின் உயர் ஸ்­தா­னிகர் வருகை தந்­தி­ருக்­கின்றார். பங்­க­ளா­தேஷைப் பொறுத்த வரையில் ஒரு காலத்தில் வறிய நாடாக இருந்­தது. இன்று அந்த நிலை மாறி அங்கே இருக்­கின்ற ஆட்­சி­யாளர் ஷேக் ஹஸீ­னாவின் தலை­மையில் அந்த நாடு முன்­னேற்றம் கண்­டுள்­ளது. இலங்கை நிதி நெருக்­க­டியை எதிர்­கொண்டபோது முத­லா­வ­தாக இலங்­கைக்கு எந்த நிபந்­த­னை­களும் இன்றி 200 மில்­லியன் டொலர் கடனை பங்­க­ளாதேஷ் வழங்கி இருக்­கின்­றது.


எமது தாய் நாட்­டுக்கு பங்களாதேஷ் செய்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். பங்களாதேஷ் ஒப்பீட்டு அளவில் ஊடகத்துறையிலே வளர்ச்சி கண்டு வரும் ஒரு நாடு.


எமது அங்கத்தவர்களுக்கு ஊடகப் பயிற்சிகளைப் பெற்றுத் தர தூதுவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போரத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments

Powered by Blogger.