Header Ads



சிறுமியை காணவில்லை - மக்களின் உதவியை நாடும் பொலிஸார்


நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்லை, சீதுவ பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைக் தெரிவித்துள்ளது.


காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே சிறுமியை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


காணாமல் போன சிறுமி பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் நீர்கொழும்பு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி பொலிஸார்  கோரியுள்ளனர்.

No comments

Powered by Blogger.