Header Ads



திடீரேன தீப்பற்றிய உணவகம் (படங்கள் இணைப்பு)


வவுனியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரேன தீப்பற்றியமையினையடுத்து தீயனைப்பு பிரிவினர் பலத்த போராட்டத்தின் மத்தியின் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  


இந்த சம்பவம் இன்றிரவு (19-07-2023) 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கண்டி வீதியில் இரண்டாம் குருக்கு வீதி சந்தியில் அமைந்துள்ள பிரபல உணவகமானது இரவு திடீரேன தீப்பற்றியேந்துள்ளது.


இதனை அவதானித்த பொதுமக்கள் வவுனியா நகரசபை தீயனைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு பிரிவினர் பலத்த போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.  


இதனால் தொடர்ச்சியாக அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவல் ஏற்படதா வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டது.


இருப்பினும், இவ் தீப்பரவலுக்கான காரணம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கின்ற போதிலும் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  


இந்த தீப்பரவல் காரணமாக உணவகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  





No comments

Powered by Blogger.