Header Ads



இதற்கெல்லாம் இப்படியா செய்வது..?


யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.


பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.


இதனால் கோபமடைந்த குறித்த பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.


இச்சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன் கிழமை அன்று இடம்பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ் போதனா வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இம்மாணவியின்,  சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார்.


உயிரிழந்த மாணவி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வருகிறார் என்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8 பாடங்களில் விசேட சித்தியினையும் 1 பாடத்தில் திறமைச் சித்தியினையும் பெற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.