Header Ads



டென்மார்க் பெண்ணின் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு


கண்டி - பொத்தபிட்டிய, அலகல்ல மலையேற்றத்திற்காக சென்று காணாமல் போயிருந்த டென்மார்க் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


டென்மார்க்​கை சேர்ந்த 32 வயதான குறித்த பெண் அலகல்ல மலையேற்றத்திற்காக, தான் தங்கியிருந்த அம்பிட்டிய ஹோட்டலில் இருந்து கடந்த 10 ஆம் திகதி வௌியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர். 


எனினும், குறித்த தினத்தில் அவர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பாத நிலையில், ஹோட்டல் முகாமையாளர் கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார். 


இதனையடுத்து, அவரைத் தேடும் பணிகளை இராணுவமும் பாதுகாப்பு பிரிவினரும் முன்னெடுத்திருந்தனர். 


இந்த நிலையில், இன்றைய தினம் அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.