Header Ads



முன்னுதாரணமாக இயங்கும், நூரானியா ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்தினர்


கடந்த வாரம் எனது பால்ய சிநேகிதன்  ஒருவரை சந்திக்க புத்தளம் சென்றிருந்தேன்.


அஷர் தொழுகைக்கான நேரம் வந்ததால் அங்குள்ள பள்ளிவாயலுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன்.


ஆம் இவ் இறை இல்லம்  புத்தளத்தில் உள்ள முல்லை ஸ்கீம் ( Mullai Scheme) எனும் குட்டிக்கிராமத்தில் அமைந்த நூரானியா ஜும்மா பள்ளிவாயலே அது.


உள்ளே சென்றவுடன் வியக்கும் வகையில் அமைந்திருந்தன அதன் உட்கட்டமைப்பு வசதிகள்.


அழகான பூமரங்கள், நேர்த்தியாகவும் சீராகவும் பேணப்பட்டு வரும் பள்ளிவாயல் முற்றம்.


ஆங்காங்கே அறிவுறுத்தல் பதாகைகள், அதை செவ்வனே பின்பற்றும், கிராம வாசிகள்.


என சிறப்பாக நிருவகிக்கப்பட்டு வரும் இப்பள்ளிவாயலின் நிருவாகத்தினரை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.


இப்படியாக முன்னுதாரணமாக இயங்கும் பள்ளி வாயல்களின் நிருவாகத்தினர் பாரட்டப்பட வேண்டியவர்கள்.


எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு பறகத்தை வழங்குவானாக..!


வன்னி ரயிஸ்.

No comments

Powered by Blogger.