Header Ads



மன்னம்பிட்டி பாலத்தில் அகோர விபத்தில் சிக்கிய பஸ் - 10 பேர் உயிரிழப்பு, 40 பேர் படுகாயம்


மட்டக்களப்பு - கதிரவெளியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில்,பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 


குறித்த விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.